FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, October 8, 2015

தேசிய அடையாள அட்டை 46,719 பேருக்கு வழங்கல்

சேலம்: 
சேலம் மாவட்டத்தில், 46 ஆயிரத்து, 719 மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தேசிய அடையாள அட்டை, தகுதியுடைய மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம், அவர்கள் அரசின் பல்வேறு சலுகை மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். இந்த அட்டை பெறுவதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மையத்தில், அரசு மருத்துவமனை டாக்டர் குழு மூலம், கண், காது, கை, கால், மனநிலை உள்ளிட்டவை பரிசோதனை செய்கின்றனர். அந்த ஆய்வில், 40 சதவீதம் மற்றும், அதற்கு மேல் மாற்றுத்திறன் தன்மை கொண்ட மாற்றுத்திறனாளிக்கு, தேசிய அடையாள அட்டை வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அட்டையை கொண்டு, இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், காதொலி கருவி, முடக்கு கருவி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 'சேலம் மாவட்டத்தில், இதுவரை, தேசிய அடையாள அட்டையை, 46 ஆயிரத்து, 719 மாற்றுத்திறனாளிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர்' என, மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment