FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, October 8, 2015

தேசிய அடையாள அட்டை 46,719 பேருக்கு வழங்கல்

சேலம்: 
சேலம் மாவட்டத்தில், 46 ஆயிரத்து, 719 மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தேசிய அடையாள அட்டை, தகுதியுடைய மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம், அவர்கள் அரசின் பல்வேறு சலுகை மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். இந்த அட்டை பெறுவதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மையத்தில், அரசு மருத்துவமனை டாக்டர் குழு மூலம், கண், காது, கை, கால், மனநிலை உள்ளிட்டவை பரிசோதனை செய்கின்றனர். அந்த ஆய்வில், 40 சதவீதம் மற்றும், அதற்கு மேல் மாற்றுத்திறன் தன்மை கொண்ட மாற்றுத்திறனாளிக்கு, தேசிய அடையாள அட்டை வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அட்டையை கொண்டு, இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், காதொலி கருவி, முடக்கு கருவி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 'சேலம் மாவட்டத்தில், இதுவரை, தேசிய அடையாள அட்டையை, 46 ஆயிரத்து, 719 மாற்றுத்திறனாளிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர்' என, மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment