FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, October 8, 2015

தேசிய அடையாள அட்டை 46,719 பேருக்கு வழங்கல்

சேலம்: 
சேலம் மாவட்டத்தில், 46 ஆயிரத்து, 719 மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தேசிய அடையாள அட்டை, தகுதியுடைய மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம், அவர்கள் அரசின் பல்வேறு சலுகை மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். இந்த அட்டை பெறுவதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மையத்தில், அரசு மருத்துவமனை டாக்டர் குழு மூலம், கண், காது, கை, கால், மனநிலை உள்ளிட்டவை பரிசோதனை செய்கின்றனர். அந்த ஆய்வில், 40 சதவீதம் மற்றும், அதற்கு மேல் மாற்றுத்திறன் தன்மை கொண்ட மாற்றுத்திறனாளிக்கு, தேசிய அடையாள அட்டை வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அட்டையை கொண்டு, இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், காதொலி கருவி, முடக்கு கருவி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 'சேலம் மாவட்டத்தில், இதுவரை, தேசிய அடையாள அட்டையை, 46 ஆயிரத்து, 719 மாற்றுத்திறனாளிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர்' என, மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment