FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, October 8, 2015

தேசிய அடையாள அட்டை 46,719 பேருக்கு வழங்கல்

சேலம்: 
சேலம் மாவட்டத்தில், 46 ஆயிரத்து, 719 மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தேசிய அடையாள அட்டை, தகுதியுடைய மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம், அவர்கள் அரசின் பல்வேறு சலுகை மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். இந்த அட்டை பெறுவதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மையத்தில், அரசு மருத்துவமனை டாக்டர் குழு மூலம், கண், காது, கை, கால், மனநிலை உள்ளிட்டவை பரிசோதனை செய்கின்றனர். அந்த ஆய்வில், 40 சதவீதம் மற்றும், அதற்கு மேல் மாற்றுத்திறன் தன்மை கொண்ட மாற்றுத்திறனாளிக்கு, தேசிய அடையாள அட்டை வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அட்டையை கொண்டு, இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், காதொலி கருவி, முடக்கு கருவி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 'சேலம் மாவட்டத்தில், இதுவரை, தேசிய அடையாள அட்டையை, 46 ஆயிரத்து, 719 மாற்றுத்திறனாளிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர்' என, மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment