FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, October 27, 2015

புதிய திருப்பம்: கீதாவை சொந்தம் கொண்டாடும் உத்தரப்பிரதேச தம்பதி

லக்னௌ,  27 October 2015

பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய மாற்றுத்திறனாளிப் பெண் கீதாவை, தங்களது மகள் என்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி ஒன்று கூறியிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

15 ஆண்டுகளாக பாகிஸ்தானில் தவித்து வந்த மாற்றுத்திறனாளி பெண் கீதா நேற்று இந்தியா திரும்பினார். ஏற்கனவே அவரை தங்களது மகள் என்று கூறியுள்ள பிகாரைச் சேர்ந்த ஜனார்த்தன் மஹதோ தம்பதியரை, தனது பெற்றோர் இல்லை என கீதா கூறியிருந்த நிலையில், அவர்களுக்கு மரபணு சோதனை நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்ராஜ் கௌதம் - அனரா தேவி தம்பதி, கீதா தங்களது காணாமல் போன மகள் என்று சொந்தம் கொண்டாடி உள்ளனர். அவர்கள் அலகாபாத் காவல்துறை ஆணையரிடம் தங்களது மனுவை அளித்துள்ள நிலையில், மகளைக் காண தில்லி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment