FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, October 29, 2015

சைகை மொழியில் ஜன கண மன பாடிய இந்தியாவின் செல்ல மகள் கீதா

இந்தூர், அக்.29-
இந்தியாவில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் சென்ற வாய் பேசமுடியாத, காது கேளாத பெண்ணான கீதாவை கடந்த 15 வருடங்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த எதி அறக்கட்டளை ஆதரவளித்து பாதுகாத்து வந்த நிலையில் கடந்த திங்கள் அன்று அவர் அந்த அறக்கட்டளையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இந்தியா திரும்பினார்.

செல்லும் இடம் எங்கும் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் கீதாவுக்கு தங்கள் அன்பை வாழ்த்துக்களாக தெரிவித்து வருகின்றனர். தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இல்லத்தில் தங்கியிருக்கும் கீதா, நேற்று இந்திய தேசிய கீதத்தை சைகை மொழியில் அபிநயம் செய்து, தன்னைப் போன்ற குழந்தைகள் மற்றும் தொண்டு நிறுவன அதிகாரிகளின் அன்பையும் பாராட்டையும் பரிசாய் பெற்றார்.

இது குறித்து அந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா பஞ்சாபி வர்மா, கீதா தேசிய கீதத்தை இப்படிப் பாடுவது இதுவே முதல் முறை என்றும், கீதாவை இங்குள்ள சூழலுடன் ஒன்றச் செய்வதே எங்கள் தலையாய பணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment