FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, October 29, 2015

சைகை மொழியில் ஜன கண மன பாடிய இந்தியாவின் செல்ல மகள் கீதா

இந்தூர், அக்.29-
இந்தியாவில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் சென்ற வாய் பேசமுடியாத, காது கேளாத பெண்ணான கீதாவை கடந்த 15 வருடங்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த எதி அறக்கட்டளை ஆதரவளித்து பாதுகாத்து வந்த நிலையில் கடந்த திங்கள் அன்று அவர் அந்த அறக்கட்டளையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இந்தியா திரும்பினார்.

செல்லும் இடம் எங்கும் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் கீதாவுக்கு தங்கள் அன்பை வாழ்த்துக்களாக தெரிவித்து வருகின்றனர். தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இல்லத்தில் தங்கியிருக்கும் கீதா, நேற்று இந்திய தேசிய கீதத்தை சைகை மொழியில் அபிநயம் செய்து, தன்னைப் போன்ற குழந்தைகள் மற்றும் தொண்டு நிறுவன அதிகாரிகளின் அன்பையும் பாராட்டையும் பரிசாய் பெற்றார்.

இது குறித்து அந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா பஞ்சாபி வர்மா, கீதா தேசிய கீதத்தை இப்படிப் பாடுவது இதுவே முதல் முறை என்றும், கீதாவை இங்குள்ள சூழலுடன் ஒன்றச் செய்வதே எங்கள் தலையாய பணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment