FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, October 29, 2015

சைகை மொழியில் ஜன கண மன பாடிய இந்தியாவின் செல்ல மகள் கீதா

இந்தூர், அக்.29-
இந்தியாவில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் சென்ற வாய் பேசமுடியாத, காது கேளாத பெண்ணான கீதாவை கடந்த 15 வருடங்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த எதி அறக்கட்டளை ஆதரவளித்து பாதுகாத்து வந்த நிலையில் கடந்த திங்கள் அன்று அவர் அந்த அறக்கட்டளையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இந்தியா திரும்பினார்.

செல்லும் இடம் எங்கும் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் கீதாவுக்கு தங்கள் அன்பை வாழ்த்துக்களாக தெரிவித்து வருகின்றனர். தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இல்லத்தில் தங்கியிருக்கும் கீதா, நேற்று இந்திய தேசிய கீதத்தை சைகை மொழியில் அபிநயம் செய்து, தன்னைப் போன்ற குழந்தைகள் மற்றும் தொண்டு நிறுவன அதிகாரிகளின் அன்பையும் பாராட்டையும் பரிசாய் பெற்றார்.

இது குறித்து அந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா பஞ்சாபி வர்மா, கீதா தேசிய கீதத்தை இப்படிப் பாடுவது இதுவே முதல் முறை என்றும், கீதாவை இங்குள்ள சூழலுடன் ஒன்றச் செய்வதே எங்கள் தலையாய பணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment