FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, October 21, 2015

மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

தஞ்சாவூர், 21 October 2015
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள மற்றும் குழுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டிகளை உதவி ஆட்சியர் (பயிற்சி) தீபக் ஜேக்கப் தொடக்கி வைத்தார். இதில், சுமார் 520 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

காது கேளாதோருக்கான தவளை ஓட்டம், பலூன் உடைத்தல், உருளைக் கிழங்கு சேகரித்தல், பாட்டில் நிரப்புதல், நீளம் தாண்டுதல், ஸ்கிப்பிங் கயிறு தாண்டுதல் போன்ற போட்டிகளும், பார்வையற்றோருக்கான நீளம் தாண்டுதல், பந்து எறிதல், குண்டு எறிதல், போன்ற போட்டிகளும், கை, கால் ஊனமுற்றோருக்கான 50, 75 மீட்டர் ஓட்டப்பந்தயம், சக்கர நாற்காலி போட்டி, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. மன வளர்ச்சி குன்றியோருக்கான 25, 50, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், பந்து எறிதல் போன்ற போட்டிகளும், புற உலகு சிந்தனையற்றவர்களுக்கான (ஆட்டிஸம்) பந்து எறிதல், உருளைக் கிழங்கு சேகரித்தல், ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளும், மன நலன் பாதிக்கப்பட்டோருக்கான நீளம் தாண்டுதல், பந்து எறிதல் போன்ற போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவி ஆட்சியர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் த.ப. ஜெய்பீம் (தஞ்சாவூர்), மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஆர். ரவிச்சந்திரன், ஆவின் பொது மேலாளர் டி. சிவசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் க. பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment