FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, October 21, 2015

மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

தஞ்சாவூர், 21 October 2015
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள மற்றும் குழுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டிகளை உதவி ஆட்சியர் (பயிற்சி) தீபக் ஜேக்கப் தொடக்கி வைத்தார். இதில், சுமார் 520 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

காது கேளாதோருக்கான தவளை ஓட்டம், பலூன் உடைத்தல், உருளைக் கிழங்கு சேகரித்தல், பாட்டில் நிரப்புதல், நீளம் தாண்டுதல், ஸ்கிப்பிங் கயிறு தாண்டுதல் போன்ற போட்டிகளும், பார்வையற்றோருக்கான நீளம் தாண்டுதல், பந்து எறிதல், குண்டு எறிதல், போன்ற போட்டிகளும், கை, கால் ஊனமுற்றோருக்கான 50, 75 மீட்டர் ஓட்டப்பந்தயம், சக்கர நாற்காலி போட்டி, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. மன வளர்ச்சி குன்றியோருக்கான 25, 50, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், பந்து எறிதல் போன்ற போட்டிகளும், புற உலகு சிந்தனையற்றவர்களுக்கான (ஆட்டிஸம்) பந்து எறிதல், உருளைக் கிழங்கு சேகரித்தல், ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளும், மன நலன் பாதிக்கப்பட்டோருக்கான நீளம் தாண்டுதல், பந்து எறிதல் போன்ற போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவி ஆட்சியர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் த.ப. ஜெய்பீம் (தஞ்சாவூர்), மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஆர். ரவிச்சந்திரன், ஆவின் பொது மேலாளர் டி. சிவசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் க. பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment