FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, October 21, 2015

மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

தஞ்சாவூர், 21 October 2015
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள மற்றும் குழுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டிகளை உதவி ஆட்சியர் (பயிற்சி) தீபக் ஜேக்கப் தொடக்கி வைத்தார். இதில், சுமார் 520 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

காது கேளாதோருக்கான தவளை ஓட்டம், பலூன் உடைத்தல், உருளைக் கிழங்கு சேகரித்தல், பாட்டில் நிரப்புதல், நீளம் தாண்டுதல், ஸ்கிப்பிங் கயிறு தாண்டுதல் போன்ற போட்டிகளும், பார்வையற்றோருக்கான நீளம் தாண்டுதல், பந்து எறிதல், குண்டு எறிதல், போன்ற போட்டிகளும், கை, கால் ஊனமுற்றோருக்கான 50, 75 மீட்டர் ஓட்டப்பந்தயம், சக்கர நாற்காலி போட்டி, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. மன வளர்ச்சி குன்றியோருக்கான 25, 50, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், பந்து எறிதல் போன்ற போட்டிகளும், புற உலகு சிந்தனையற்றவர்களுக்கான (ஆட்டிஸம்) பந்து எறிதல், உருளைக் கிழங்கு சேகரித்தல், ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளும், மன நலன் பாதிக்கப்பட்டோருக்கான நீளம் தாண்டுதல், பந்து எறிதல் போன்ற போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவி ஆட்சியர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் த.ப. ஜெய்பீம் (தஞ்சாவூர்), மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஆர். ரவிச்சந்திரன், ஆவின் பொது மேலாளர் டி. சிவசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் க. பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment