FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, October 21, 2015

மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

தஞ்சாவூர், 21 October 2015
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள மற்றும் குழுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டிகளை உதவி ஆட்சியர் (பயிற்சி) தீபக் ஜேக்கப் தொடக்கி வைத்தார். இதில், சுமார் 520 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

காது கேளாதோருக்கான தவளை ஓட்டம், பலூன் உடைத்தல், உருளைக் கிழங்கு சேகரித்தல், பாட்டில் நிரப்புதல், நீளம் தாண்டுதல், ஸ்கிப்பிங் கயிறு தாண்டுதல் போன்ற போட்டிகளும், பார்வையற்றோருக்கான நீளம் தாண்டுதல், பந்து எறிதல், குண்டு எறிதல், போன்ற போட்டிகளும், கை, கால் ஊனமுற்றோருக்கான 50, 75 மீட்டர் ஓட்டப்பந்தயம், சக்கர நாற்காலி போட்டி, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. மன வளர்ச்சி குன்றியோருக்கான 25, 50, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், பந்து எறிதல் போன்ற போட்டிகளும், புற உலகு சிந்தனையற்றவர்களுக்கான (ஆட்டிஸம்) பந்து எறிதல், உருளைக் கிழங்கு சேகரித்தல், ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளும், மன நலன் பாதிக்கப்பட்டோருக்கான நீளம் தாண்டுதல், பந்து எறிதல் போன்ற போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவி ஆட்சியர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் த.ப. ஜெய்பீம் (தஞ்சாவூர்), மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஆர். ரவிச்சந்திரன், ஆவின் பொது மேலாளர் டி. சிவசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் க. பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment