FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, October 12, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமி ஒப்புதல் வாக்குமூலம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் கைது

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமி, ஓசூர் விரைவு நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்கொச்சாவூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, கடந்த டிசம்பர் மாதம் 4 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் சிறுமியின் தந்தை வீரபத்ரப்பா உள்ளிட்டோர், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஓசூர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி குமரவர்மன் முன்னிலையில் அந்த சிறுமியை ஆஜர்படுத்தி,போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.மேலும் சிறுமி முன்பு தங்கி இருந்த ஓசூர் காப்பகத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment