FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, October 12, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமி ஒப்புதல் வாக்குமூலம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் கைது

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமி, ஓசூர் விரைவு நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்கொச்சாவூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, கடந்த டிசம்பர் மாதம் 4 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் சிறுமியின் தந்தை வீரபத்ரப்பா உள்ளிட்டோர், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஓசூர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி குமரவர்மன் முன்னிலையில் அந்த சிறுமியை ஆஜர்படுத்தி,போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.மேலும் சிறுமி முன்பு தங்கி இருந்த ஓசூர் காப்பகத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment