FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, October 12, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமி ஒப்புதல் வாக்குமூலம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் கைது

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமி, ஓசூர் விரைவு நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்கொச்சாவூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, கடந்த டிசம்பர் மாதம் 4 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் சிறுமியின் தந்தை வீரபத்ரப்பா உள்ளிட்டோர், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஓசூர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி குமரவர்மன் முன்னிலையில் அந்த சிறுமியை ஆஜர்படுத்தி,போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.மேலும் சிறுமி முன்பு தங்கி இருந்த ஓசூர் காப்பகத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment