FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, October 8, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு குழு விளையாட்டு போட்டி

08.10.2015, திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன.

மதுரை மண்டல முதுநிலை மேலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து போட்டிகளை துவக்கினார். விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதிசற்குணம் முன்னிலை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் 736 பேர் பங்கேற்றனர்.கைகால் ஊனமுற்றோர்: 50 மீட்டர் ஓட்டத்தில் நிவேதா, 100 மீ., ஓட்டத்தில் ஹேமா, சக்கர நாற்காலி போட்டியில் ஜெயபால் முதலிடம் பெற்றனர்.

பார்வையற்றோர் பிரிவு: 50 மீ., ஓட்டத்தில் பவுனம்மாள், 100 மீ., ஓட்டத்தில் அபி முதலிடம் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் 50 மீ., ஓட்டத்தில் சின்னச்சாமியும், 100 மீ., ஓட்டத்தில் வினோத்குமாரும் முதலிடம் பெற்றனர்.

மனநலம் பாதித்தவர்கள்: மாணவர்கள் பிரிவில் 50 மீ., ஓட்டத்தில் நாகராஜ் (புதுவாழ்வு திட்டம்), 100 மீ., ஓட்டத்தில் பொதியன் முதலிடம் பெற்றனர். மாணவிகள் பிரிவில் 50 மீ., ஓட்டத்தில் பவுலி, 100 மீ., ஓட்டத்தில் துர்கா லட்சுமி முதலிடம் பெற்றனர்.

குழுபோட்டி: எறிபந்து போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவில் லில்லியன் பள்ளி முதலிடம் பெற்றது.

காதுகேளாதோர் போட்டி: மாணவிகள் பிரிவில் 100 மீ., ஓட்டத்தில் போதும்பொண்ணு, 200 மீ., ஓட்டத்தில் காளீஸ்வரி, 400 மீ., ஓட்டத்தில் கோபிகா முதலிடம் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் 100 மீ., ஓட்டத்தில் பால்பாண்டி, 200 மீ., ஓட்டத்தில் ராஜ்குமார், 400 மீ., ஓட்டத்தில் விஷ்ணுராம் முதலிடம் பெற்றனர். விழாவில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மதிவாணன், உடற்கல்வி ஆய்வாளர் கனிமுத்து பங்கேற்றனர்.

No comments:

Post a Comment