FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, October 8, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு குழு விளையாட்டு போட்டி

08.10.2015, திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன.

மதுரை மண்டல முதுநிலை மேலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து போட்டிகளை துவக்கினார். விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதிசற்குணம் முன்னிலை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் 736 பேர் பங்கேற்றனர்.கைகால் ஊனமுற்றோர்: 50 மீட்டர் ஓட்டத்தில் நிவேதா, 100 மீ., ஓட்டத்தில் ஹேமா, சக்கர நாற்காலி போட்டியில் ஜெயபால் முதலிடம் பெற்றனர்.

பார்வையற்றோர் பிரிவு: 50 மீ., ஓட்டத்தில் பவுனம்மாள், 100 மீ., ஓட்டத்தில் அபி முதலிடம் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் 50 மீ., ஓட்டத்தில் சின்னச்சாமியும், 100 மீ., ஓட்டத்தில் வினோத்குமாரும் முதலிடம் பெற்றனர்.

மனநலம் பாதித்தவர்கள்: மாணவர்கள் பிரிவில் 50 மீ., ஓட்டத்தில் நாகராஜ் (புதுவாழ்வு திட்டம்), 100 மீ., ஓட்டத்தில் பொதியன் முதலிடம் பெற்றனர். மாணவிகள் பிரிவில் 50 மீ., ஓட்டத்தில் பவுலி, 100 மீ., ஓட்டத்தில் துர்கா லட்சுமி முதலிடம் பெற்றனர்.

குழுபோட்டி: எறிபந்து போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவில் லில்லியன் பள்ளி முதலிடம் பெற்றது.

காதுகேளாதோர் போட்டி: மாணவிகள் பிரிவில் 100 மீ., ஓட்டத்தில் போதும்பொண்ணு, 200 மீ., ஓட்டத்தில் காளீஸ்வரி, 400 மீ., ஓட்டத்தில் கோபிகா முதலிடம் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் 100 மீ., ஓட்டத்தில் பால்பாண்டி, 200 மீ., ஓட்டத்தில் ராஜ்குமார், 400 மீ., ஓட்டத்தில் விஷ்ணுராம் முதலிடம் பெற்றனர். விழாவில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மதிவாணன், உடற்கல்வி ஆய்வாளர் கனிமுத்து பங்கேற்றனர்.

No comments:

Post a Comment