FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, October 8, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு குழு விளையாட்டு போட்டி

08.10.2015, திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன.

மதுரை மண்டல முதுநிலை மேலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து போட்டிகளை துவக்கினார். விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதிசற்குணம் முன்னிலை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் 736 பேர் பங்கேற்றனர்.கைகால் ஊனமுற்றோர்: 50 மீட்டர் ஓட்டத்தில் நிவேதா, 100 மீ., ஓட்டத்தில் ஹேமா, சக்கர நாற்காலி போட்டியில் ஜெயபால் முதலிடம் பெற்றனர்.

பார்வையற்றோர் பிரிவு: 50 மீ., ஓட்டத்தில் பவுனம்மாள், 100 மீ., ஓட்டத்தில் அபி முதலிடம் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் 50 மீ., ஓட்டத்தில் சின்னச்சாமியும், 100 மீ., ஓட்டத்தில் வினோத்குமாரும் முதலிடம் பெற்றனர்.

மனநலம் பாதித்தவர்கள்: மாணவர்கள் பிரிவில் 50 மீ., ஓட்டத்தில் நாகராஜ் (புதுவாழ்வு திட்டம்), 100 மீ., ஓட்டத்தில் பொதியன் முதலிடம் பெற்றனர். மாணவிகள் பிரிவில் 50 மீ., ஓட்டத்தில் பவுலி, 100 மீ., ஓட்டத்தில் துர்கா லட்சுமி முதலிடம் பெற்றனர்.

குழுபோட்டி: எறிபந்து போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவில் லில்லியன் பள்ளி முதலிடம் பெற்றது.

காதுகேளாதோர் போட்டி: மாணவிகள் பிரிவில் 100 மீ., ஓட்டத்தில் போதும்பொண்ணு, 200 மீ., ஓட்டத்தில் காளீஸ்வரி, 400 மீ., ஓட்டத்தில் கோபிகா முதலிடம் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் 100 மீ., ஓட்டத்தில் பால்பாண்டி, 200 மீ., ஓட்டத்தில் ராஜ்குமார், 400 மீ., ஓட்டத்தில் விஷ்ணுராம் முதலிடம் பெற்றனர். விழாவில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மதிவாணன், உடற்கல்வி ஆய்வாளர் கனிமுத்து பங்கேற்றனர்.

No comments:

Post a Comment