FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, October 8, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு குழு விளையாட்டு போட்டி

08.10.2015, திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன.

மதுரை மண்டல முதுநிலை மேலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து போட்டிகளை துவக்கினார். விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதிசற்குணம் முன்னிலை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் 736 பேர் பங்கேற்றனர்.கைகால் ஊனமுற்றோர்: 50 மீட்டர் ஓட்டத்தில் நிவேதா, 100 மீ., ஓட்டத்தில் ஹேமா, சக்கர நாற்காலி போட்டியில் ஜெயபால் முதலிடம் பெற்றனர்.

பார்வையற்றோர் பிரிவு: 50 மீ., ஓட்டத்தில் பவுனம்மாள், 100 மீ., ஓட்டத்தில் அபி முதலிடம் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் 50 மீ., ஓட்டத்தில் சின்னச்சாமியும், 100 மீ., ஓட்டத்தில் வினோத்குமாரும் முதலிடம் பெற்றனர்.

மனநலம் பாதித்தவர்கள்: மாணவர்கள் பிரிவில் 50 மீ., ஓட்டத்தில் நாகராஜ் (புதுவாழ்வு திட்டம்), 100 மீ., ஓட்டத்தில் பொதியன் முதலிடம் பெற்றனர். மாணவிகள் பிரிவில் 50 மீ., ஓட்டத்தில் பவுலி, 100 மீ., ஓட்டத்தில் துர்கா லட்சுமி முதலிடம் பெற்றனர்.

குழுபோட்டி: எறிபந்து போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவில் லில்லியன் பள்ளி முதலிடம் பெற்றது.

காதுகேளாதோர் போட்டி: மாணவிகள் பிரிவில் 100 மீ., ஓட்டத்தில் போதும்பொண்ணு, 200 மீ., ஓட்டத்தில் காளீஸ்வரி, 400 மீ., ஓட்டத்தில் கோபிகா முதலிடம் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் 100 மீ., ஓட்டத்தில் பால்பாண்டி, 200 மீ., ஓட்டத்தில் ராஜ்குமார், 400 மீ., ஓட்டத்தில் விஷ்ணுராம் முதலிடம் பெற்றனர். விழாவில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மதிவாணன், உடற்கல்வி ஆய்வாளர் கனிமுத்து பங்கேற்றனர்.

No comments:

Post a Comment