FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, October 8, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு குழு விளையாட்டு போட்டி

08.10.2015, திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன.

மதுரை மண்டல முதுநிலை மேலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து போட்டிகளை துவக்கினார். விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதிசற்குணம் முன்னிலை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் 736 பேர் பங்கேற்றனர்.கைகால் ஊனமுற்றோர்: 50 மீட்டர் ஓட்டத்தில் நிவேதா, 100 மீ., ஓட்டத்தில் ஹேமா, சக்கர நாற்காலி போட்டியில் ஜெயபால் முதலிடம் பெற்றனர்.

பார்வையற்றோர் பிரிவு: 50 மீ., ஓட்டத்தில் பவுனம்மாள், 100 மீ., ஓட்டத்தில் அபி முதலிடம் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் 50 மீ., ஓட்டத்தில் சின்னச்சாமியும், 100 மீ., ஓட்டத்தில் வினோத்குமாரும் முதலிடம் பெற்றனர்.

மனநலம் பாதித்தவர்கள்: மாணவர்கள் பிரிவில் 50 மீ., ஓட்டத்தில் நாகராஜ் (புதுவாழ்வு திட்டம்), 100 மீ., ஓட்டத்தில் பொதியன் முதலிடம் பெற்றனர். மாணவிகள் பிரிவில் 50 மீ., ஓட்டத்தில் பவுலி, 100 மீ., ஓட்டத்தில் துர்கா லட்சுமி முதலிடம் பெற்றனர்.

குழுபோட்டி: எறிபந்து போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவில் லில்லியன் பள்ளி முதலிடம் பெற்றது.

காதுகேளாதோர் போட்டி: மாணவிகள் பிரிவில் 100 மீ., ஓட்டத்தில் போதும்பொண்ணு, 200 மீ., ஓட்டத்தில் காளீஸ்வரி, 400 மீ., ஓட்டத்தில் கோபிகா முதலிடம் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் 100 மீ., ஓட்டத்தில் பால்பாண்டி, 200 மீ., ஓட்டத்தில் ராஜ்குமார், 400 மீ., ஓட்டத்தில் விஷ்ணுராம் முதலிடம் பெற்றனர். விழாவில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மதிவாணன், உடற்கல்வி ஆய்வாளர் கனிமுத்து பங்கேற்றனர்.

No comments:

Post a Comment