FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, October 18, 2015

மாற்றுத்திறனாளி விளையாட்டு போட்டி மாணவர்கள் தவறி விழுந்ததால் பரபரப்பு

17.10.2015ஈரோடு: 
ஈரோடு மாவட்ட அளவில், மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டி, வ.உ.சி., மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், ஈரோடு கொங்கு அறிவாலயம் மாற்றுத்திறனாளிகள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி, சக்திதேவி அறக்கட்டளை சிறப்பு பள்ளி, ஆர்.என்.புதூர், மாற்றுத்திறனாளி நலத்துறை காது கேளாதோர் அரசு உயர்நிலைப்பள்ளி உட்பட, ௧௦ சிறப்பு பள்ளிகளில் இருந்து, 150க்கும், மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கை, கால், ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர், காது கேளாதவர் என தனித்தனியாக போட்டி நடந்தது. இதில் வெற்றி பெறுவோர், மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்.
தவறி விழுந்த மாணவர்கள் மாற்றுதிறனாளிகளுக்கான போட்டிகளை நடத்தும்போது, முன்னெச்சரிக்கையாக மருத்துவகுழு இருக்க வேண்டும். ஆனால் நேற்று நடந்த போட்டியில், மருத்துவக்குழு எதுவும் இல்லை. ஓட்டப்பந்தயத்தில், சில மாணவர்கள் தவறி விழுந்து காயம் அடைந்தனர்.

No comments:

Post a Comment