FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, October 18, 2015

மாற்றுத்திறனாளி விளையாட்டு போட்டி மாணவர்கள் தவறி விழுந்ததால் பரபரப்பு

17.10.2015ஈரோடு: 
ஈரோடு மாவட்ட அளவில், மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டி, வ.உ.சி., மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், ஈரோடு கொங்கு அறிவாலயம் மாற்றுத்திறனாளிகள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி, சக்திதேவி அறக்கட்டளை சிறப்பு பள்ளி, ஆர்.என்.புதூர், மாற்றுத்திறனாளி நலத்துறை காது கேளாதோர் அரசு உயர்நிலைப்பள்ளி உட்பட, ௧௦ சிறப்பு பள்ளிகளில் இருந்து, 150க்கும், மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கை, கால், ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர், காது கேளாதவர் என தனித்தனியாக போட்டி நடந்தது. இதில் வெற்றி பெறுவோர், மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்.
தவறி விழுந்த மாணவர்கள் மாற்றுதிறனாளிகளுக்கான போட்டிகளை நடத்தும்போது, முன்னெச்சரிக்கையாக மருத்துவகுழு இருக்க வேண்டும். ஆனால் நேற்று நடந்த போட்டியில், மருத்துவக்குழு எதுவும் இல்லை. ஓட்டப்பந்தயத்தில், சில மாணவர்கள் தவறி விழுந்து காயம் அடைந்தனர்.

No comments:

Post a Comment