FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, October 27, 2015

கீதா எங்கள் மகள் தான் தெலுங்கானா தம்பதியரால் புதிய பரபரப்பு

27.10.2015, 
இந்தியாவை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத கீதா 8 வயது சிறுமியாக இருக்கும்போது வழிதவறி பாகிஸ்தானுக்கு சென்று விட்டார்.

லாகூர் ரெயில் நிலையத்தில் கீதாவை மீட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் போலீசில் ஒப்படைத்தனர். அங்குள்ள ஒரு அறக்கட்டளை கீதாவை பாதுகாத்து வளர்த்தது.

கீதாவுக்கு தற்போது 23 வயது ஆகிறது. நடிகர் சல்மான்கான் நடித்த ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ இந்தி படம் பாகிஸ்தானில் வெளியான பின்னர் கீதாவின் கதை வெளியுலகுக்கு தெரிய வந்தது.

அவர் மீது பரிதாபப்பட்ட பாகிஸ்தான் அரசாங்கம் கீதாவின் பெற்றோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இறுதியில் அவளது பெற்றோர் பீகாரில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு கீதா நேற்று இந்தியா அழைத்து வரப்பட்டார்.

பீகாரில் உள்ளவர்கள் கீதாவின் பெற்றோர்களா? என்பது அறிய அவரது தந்தையின் ரத்தம் மாதிரி டி.என்.ஏ. பரிசோதனைககு அனுப்பப்பட்டு உள்ளது. இதேபோல் கீதாவின் ரத்த மாதிரி டி.என்.ஏ. பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.

இதன் முடிவுகள் தெரிந்த பிறகே கீதா அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்.

இதற்கிடையே இந்தியா திரும்பிய கீதா எங்களது மகள் என்று தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு தம்பதி சொந்தம் கொண்டாடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் சம்மம் மாவட்டம் படமடா நரசாபுரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா– கோபம்மா தம்பதிகள் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர்கள் கூறியதாவது:–

பாகிஸ்தானில் இருந்து திரும்பிய கீதா என்ற பெண் எங்களது மகள் ராணி. கடந்த 8–ந்தேதி பத்திரிகையில் அவள் புகைப்படத்தை பார்த்தபோதே அவர் எங்களது மகள் என்று தெரிந்து கொண்டோம்.

15 வருடங்களுக்கு முன் 7 வயது இருக்கும்போது அவள் காணாமல் போய் விட்டாள். அப்போது அவளுக்கு சரியாக பேச்சு வராது. கீதாவின் கண், மூக்கு, முகச்சாயல் எனது மகள் ராணிபோல் உள்ளது.

நாங்கள் ஏழ்மை நிலையில் இருப்பதால் டெல்லி சென்று எனது மகளை பார்க்க முடியாமல் இருக்கிறோம். முதல்–மந்திரியோ, அரசியல் தலைவர்களோ எங்களுக்கு உதவி செய்து எனது மகளை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

கீதா எங்கள் மகள் என்பதை நிரூபிக்க நாங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உள்பட தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினார்கள். தங்களது மகளின் சிறிய வயது புகைப்படத்தை அவர்கள் நிருபர்கள் மத்தியில் காட்டினார்கள்.

கிருஷ்ணய்யா தம்பதிகளுக்கு உதவி செய்ய நரசாபுரம் பஞ்சாயத்து தலைவர் மோகன்ராஜ் உதவி செய்ய முன்வந்து உள்ளார்.

No comments:

Post a Comment