FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, October 29, 2015

கீதாவுக்கு உரிமை கோரும் புதிய பெற்றோர்: குழப்பம் நீடிக்கிறது

அலிகார், 29 October 2015
சிறு வயதில் காணாமல் போன நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய இளம்பெண் கீதா, தங்களது மகள் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியர் புதிதாக உரிமை கோரியுள்ளனர்.
ஏற்கெனவே, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மஹதோ தம்பதியர், கீதா தங்களது மகள் எனக் கூறியிருந்த நிலையில், புதிய தம்பதியர் உரிமை கோரியிருப்பது குழப்பத்தை அதிகரித்துள்ளது.
வாய் பேச முடியாத, காது கேளாத இளம்பெண் கீதா தனது 8-ஆவது வயதில் பெற்றோரைப் பிரிந்து பாகிஸ்தானில் தன்னந்தனியாக தவித்தபோது அந்நாட்டு ராணுவ வீரர்களால் மீட்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அங்குள்ள அறக்கட்டளை ஒன்றின் பராமறிப்பில் கடந்த 15 ஆண்டுகளாக வளர்ந்து வந்த கீதாவை மத்திய அரசு அண்மையில் இந்தியாவுக்கு அழைத்து வந்தது.
அந்தப் பெண் தங்களது மகள் என பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மஹதோ தம்பதியர் உரிமை கோரினர். இதையடுத்து, அவர்களது மரபணு மாதிரிகளையும், கீதாவின் மரபணு மாதிரியையும் சேகரித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு செய்து வருகிறது.
இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் அருகேயுள்ள உத்ரா கிராமத்தைச் சேர்ந்த பாகுல் சிங் என்பவர், சிறு வயதில் காணாமல் போன தனது மகள் டோலிதான் கீதா என்று உரிமை கோரியுள்ளார்.
இதை நிரூபிக்கும் வகையில் மரபணு சோதனைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கீதா தங்களது மகள் என அடுத்தடுத்து புதிய புதிய தம்பதியர் சொந்தம் கொண்டாடுவதால் அவருடைய உண்மையான பெற்றோர் யார்? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

No comments:

Post a Comment