FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, October 29, 2015

கீதாவுக்கு உரிமை கோரும் புதிய பெற்றோர்: குழப்பம் நீடிக்கிறது

அலிகார், 29 October 2015
சிறு வயதில் காணாமல் போன நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய இளம்பெண் கீதா, தங்களது மகள் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியர் புதிதாக உரிமை கோரியுள்ளனர்.
ஏற்கெனவே, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மஹதோ தம்பதியர், கீதா தங்களது மகள் எனக் கூறியிருந்த நிலையில், புதிய தம்பதியர் உரிமை கோரியிருப்பது குழப்பத்தை அதிகரித்துள்ளது.
வாய் பேச முடியாத, காது கேளாத இளம்பெண் கீதா தனது 8-ஆவது வயதில் பெற்றோரைப் பிரிந்து பாகிஸ்தானில் தன்னந்தனியாக தவித்தபோது அந்நாட்டு ராணுவ வீரர்களால் மீட்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அங்குள்ள அறக்கட்டளை ஒன்றின் பராமறிப்பில் கடந்த 15 ஆண்டுகளாக வளர்ந்து வந்த கீதாவை மத்திய அரசு அண்மையில் இந்தியாவுக்கு அழைத்து வந்தது.
அந்தப் பெண் தங்களது மகள் என பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மஹதோ தம்பதியர் உரிமை கோரினர். இதையடுத்து, அவர்களது மரபணு மாதிரிகளையும், கீதாவின் மரபணு மாதிரியையும் சேகரித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு செய்து வருகிறது.
இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் அருகேயுள்ள உத்ரா கிராமத்தைச் சேர்ந்த பாகுல் சிங் என்பவர், சிறு வயதில் காணாமல் போன தனது மகள் டோலிதான் கீதா என்று உரிமை கோரியுள்ளார்.
இதை நிரூபிக்கும் வகையில் மரபணு சோதனைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கீதா தங்களது மகள் என அடுத்தடுத்து புதிய புதிய தம்பதியர் சொந்தம் கொண்டாடுவதால் அவருடைய உண்மையான பெற்றோர் யார்? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

No comments:

Post a Comment