FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, October 8, 2015

மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் இன்று நடக்கிறது

பெரம்பலூர், அக்.8- 
பெரம்பலூரில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. அதன்படி கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டமும், கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டமும், குள்ளமானவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியும் நடத்தப்படவுள்ளது.

மேலும் குழுப்போட்டிகளில் பேட்மிண்ட்டன் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் 5 நபர்களும், டேபிள் டென்னிஸ் பிரிவில் 2 நபர்களும் கலந்து கொள்ளலாம். முற்றிலும் பார்வையற்றோர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், குண்டு எறிதல் போட்டியும், மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டமும், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியும், சாப்ட் பால் எறிதல் போட்டியும், குழுப்போட்டிகளில் வாலிபால் போட்டியும் நடத்தப்படவுள்ளது. இதில் ஒரு குழுவிற்கு 7 நபர்கள் கலந்¢து கொள்ள வேண்டும்.

நுண்அறிவுதிறன் தன்மை முற்றிலும் இல்லாதோருக்கு 50 மீட்டர் ஓட்டமும், சாப்ட் பால் எறிதல் போட்டியும், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியும், நுண்பிரிவு திறன் தன்மை நல்ல நிலையில் இருப்போருக்கு 100 மீட்டர் ஓட்டமும், மிகக்குறைந்த பார்வையற்றோருக்கு சாப்ட் பால் எறிதல் போட்டியும், குழுப்போட்டியில் ஒரு பிரிவில் 7 நபர்களும் கலந்து கொள்ளலாம்.

காது கேளாதோர்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும், 200 மீட்டர் ஓட்டமும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டமும், குழுப்போட்டிகளில் கபடி பிரிவில் 7 நபர்களும் பங்கு பெறலாம். மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்க வயதுவரம்பு இல்லை. ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் வரவேற்கப்படுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை மென்மேலும் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அமைந்துள்ள இந்த வாய்ப்¢பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment