FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, October 8, 2015

மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் இன்று நடக்கிறது

பெரம்பலூர், அக்.8- 
பெரம்பலூரில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. அதன்படி கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டமும், கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டமும், குள்ளமானவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியும் நடத்தப்படவுள்ளது.

மேலும் குழுப்போட்டிகளில் பேட்மிண்ட்டன் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் 5 நபர்களும், டேபிள் டென்னிஸ் பிரிவில் 2 நபர்களும் கலந்து கொள்ளலாம். முற்றிலும் பார்வையற்றோர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், குண்டு எறிதல் போட்டியும், மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டமும், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியும், சாப்ட் பால் எறிதல் போட்டியும், குழுப்போட்டிகளில் வாலிபால் போட்டியும் நடத்தப்படவுள்ளது. இதில் ஒரு குழுவிற்கு 7 நபர்கள் கலந்¢து கொள்ள வேண்டும்.

நுண்அறிவுதிறன் தன்மை முற்றிலும் இல்லாதோருக்கு 50 மீட்டர் ஓட்டமும், சாப்ட் பால் எறிதல் போட்டியும், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியும், நுண்பிரிவு திறன் தன்மை நல்ல நிலையில் இருப்போருக்கு 100 மீட்டர் ஓட்டமும், மிகக்குறைந்த பார்வையற்றோருக்கு சாப்ட் பால் எறிதல் போட்டியும், குழுப்போட்டியில் ஒரு பிரிவில் 7 நபர்களும் கலந்து கொள்ளலாம்.

காது கேளாதோர்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும், 200 மீட்டர் ஓட்டமும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டமும், குழுப்போட்டிகளில் கபடி பிரிவில் 7 நபர்களும் பங்கு பெறலாம். மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்க வயதுவரம்பு இல்லை. ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் வரவேற்கப்படுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை மென்மேலும் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அமைந்துள்ள இந்த வாய்ப்¢பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment