FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, October 8, 2015

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: இலவச விண்ணப்பம் வினியோகம்

08.10.2015, கிருஷ்ணகிரி: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்றோர், உதவித்தொகை பெற இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது என, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2010 அக்டோபர், 1ம் தேதி முதல், 2010 டிசம்பர், 31ம் தேதி வரையிலான காலாண்டில் பதிவு செய்து, தற்போது, 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ், 2 வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகளை பதிவு செய்துள்ள இளைஞர்கள், நடப்பு காலாண்டில் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பம் பெறுவதற்கு, அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, இணையதள அடையாள அட்டை ஆகியவற்றுடன், அலுவலக வேலை நாட்களில் பதிவுதாரர்கள் மட்டுமே நேரில் வந்து, கையெழுத்திட்டு பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு, 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர், 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம், 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் உரிய காலத்தில் புதுப்பித்தல் செய்து, அந்த விவரங்களை வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் பிரிவில் ஒப்படைக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும். ஏற்கனவே இத்திட்டத்தில் உதவித்தொகை பெற்று வரும் பதிவுதாரர்கள், சுய உறுதிமொழி ஆவணப்படிவத்தை வரும், 30ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை அளிப்பது நிறுத்தப்படும். உதவித்தொகை பெற்று, 3 ஆண்டுகள் முடிவுற்றவர்கள் சுயஉறுதிமொழி ஆவணம் அளிக்க தேவையில்லை. மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து சுய உறுதிமொழி அளிக்க வேண்டும். மாற்றுதிறனாளி விண்ணப்பதாரர்கள் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தால் வழங்கப்படும் சிறப்பு உதவித்தொகையை பெறவில்லை என, அந்த அலுவலரிடம் இருந்து கடிதம் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment