FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, October 8, 2015

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: இலவச விண்ணப்பம் வினியோகம்

08.10.2015, கிருஷ்ணகிரி: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்றோர், உதவித்தொகை பெற இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது என, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2010 அக்டோபர், 1ம் தேதி முதல், 2010 டிசம்பர், 31ம் தேதி வரையிலான காலாண்டில் பதிவு செய்து, தற்போது, 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ், 2 வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகளை பதிவு செய்துள்ள இளைஞர்கள், நடப்பு காலாண்டில் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பம் பெறுவதற்கு, அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, இணையதள அடையாள அட்டை ஆகியவற்றுடன், அலுவலக வேலை நாட்களில் பதிவுதாரர்கள் மட்டுமே நேரில் வந்து, கையெழுத்திட்டு பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு, 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர், 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம், 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் உரிய காலத்தில் புதுப்பித்தல் செய்து, அந்த விவரங்களை வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் பிரிவில் ஒப்படைக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும். ஏற்கனவே இத்திட்டத்தில் உதவித்தொகை பெற்று வரும் பதிவுதாரர்கள், சுய உறுதிமொழி ஆவணப்படிவத்தை வரும், 30ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை அளிப்பது நிறுத்தப்படும். உதவித்தொகை பெற்று, 3 ஆண்டுகள் முடிவுற்றவர்கள் சுயஉறுதிமொழி ஆவணம் அளிக்க தேவையில்லை. மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து சுய உறுதிமொழி அளிக்க வேண்டும். மாற்றுதிறனாளி விண்ணப்பதாரர்கள் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தால் வழங்கப்படும் சிறப்பு உதவித்தொகையை பெறவில்லை என, அந்த அலுவலரிடம் இருந்து கடிதம் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment