FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, October 8, 2015

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: இலவச விண்ணப்பம் வினியோகம்

08.10.2015, கிருஷ்ணகிரி: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்றோர், உதவித்தொகை பெற இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது என, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2010 அக்டோபர், 1ம் தேதி முதல், 2010 டிசம்பர், 31ம் தேதி வரையிலான காலாண்டில் பதிவு செய்து, தற்போது, 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ், 2 வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகளை பதிவு செய்துள்ள இளைஞர்கள், நடப்பு காலாண்டில் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பம் பெறுவதற்கு, அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, இணையதள அடையாள அட்டை ஆகியவற்றுடன், அலுவலக வேலை நாட்களில் பதிவுதாரர்கள் மட்டுமே நேரில் வந்து, கையெழுத்திட்டு பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு, 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர், 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம், 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் உரிய காலத்தில் புதுப்பித்தல் செய்து, அந்த விவரங்களை வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் பிரிவில் ஒப்படைக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும். ஏற்கனவே இத்திட்டத்தில் உதவித்தொகை பெற்று வரும் பதிவுதாரர்கள், சுய உறுதிமொழி ஆவணப்படிவத்தை வரும், 30ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை அளிப்பது நிறுத்தப்படும். உதவித்தொகை பெற்று, 3 ஆண்டுகள் முடிவுற்றவர்கள் சுயஉறுதிமொழி ஆவணம் அளிக்க தேவையில்லை. மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து சுய உறுதிமொழி அளிக்க வேண்டும். மாற்றுதிறனாளி விண்ணப்பதாரர்கள் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தால் வழங்கப்படும் சிறப்பு உதவித்தொகையை பெறவில்லை என, அந்த அலுவலரிடம் இருந்து கடிதம் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment