FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, October 6, 2015

நிறுத்தப்பட்ட உதவித்தொகையை வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் மனு

கடலூர், 06 October 2015
நிறுத்தப்பட்ட உதவித்தொகையை வழங்க வேண்டுமென மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தினர் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அந்த உதவித்தொகை சில வட்டங்களில் மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை கிடைக்காததால், மாற்றுத் திறனாளிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர். மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுவோரை உதவித்தொகை தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் அணுகும் போது வங்கிகளுக்கும், தபால் நிலையத்துக்கும் அலைய விடுகின்றனர். இதன் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், உதவித்தொகை மாதந்தோறும் அதிகபட்சம் 10-ஆம் தேதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளனர்.

இந்த மனுவை சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ், செயலர் பொன்.சண்முகம், பொருளர் எம்.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்தனர்.

No comments:

Post a Comment