FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, October 6, 2015

நிறுத்தப்பட்ட உதவித்தொகையை வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் மனு

கடலூர், 06 October 2015
நிறுத்தப்பட்ட உதவித்தொகையை வழங்க வேண்டுமென மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தினர் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அந்த உதவித்தொகை சில வட்டங்களில் மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை கிடைக்காததால், மாற்றுத் திறனாளிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர். மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுவோரை உதவித்தொகை தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் அணுகும் போது வங்கிகளுக்கும், தபால் நிலையத்துக்கும் அலைய விடுகின்றனர். இதன் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், உதவித்தொகை மாதந்தோறும் அதிகபட்சம் 10-ஆம் தேதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளனர்.

இந்த மனுவை சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ், செயலர் பொன்.சண்முகம், பொருளர் எம்.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்தனர்.

No comments:

Post a Comment