FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, October 9, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு விருதுகள்: விண்ணப்பிக்க 26ம்தேதி வரை அவகாசம்- தமிழக அரசு அறிவிப்பு

09.10.2015
மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு விருதுகள்: விண்ணப்பிக்க 26ம்தேதி வரை அவகாசம்- தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 15 விருதுகள் மற்றும் சான்றிதழ்களுக்கு வரும் 26ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள், 3.12.2015, மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளது.விருதுகள் விவரம் விருதுகள்1) சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர்(கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வைதிறன் பாதிக்கப்பட்டோர், செவித் திறன்பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சிகுன்றியோர் மற்றும் தொழுநோயால்குணமடைந்தோர்)5 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்2 சிறந்த ஆசிரியர் -(பார்வைத் திறன் பாதிக்கப்பட்டோருக்குகற்பித்தல், செவித் திறன்பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், மற்றும்மன வளர்ச்சி குன்றியோருக்குகற்பித்தல்)3 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்3 சிறந்த சமூகப் பணியாளர் 1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்4 மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்தசிறந்த தொண்டு நிறுவனம்1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்5 மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில்பணியமர்த்திய சிறந்த நிறுவனம்1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்6 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில்பணியாற்றும் சிறந்த ஆசிரியர்(செவித் திறன் குறைந்தோருக்குகற்பிக்கும் சிறந்த ஆசிரியர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும்சிறந்த ஆசிரியர்)2 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்7 மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாகபணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்2 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்மொத்தம் 15 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் விருதுகள் பெற, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், ஜவஹர்லால் நேருஉள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை - 78 அல்லது www. scd.tn. gov. in என்ற இணையதளமுகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்அவர்களிடம் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களுக்கு 26.10.2015க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment