FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, October 9, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு விருதுகள்: விண்ணப்பிக்க 26ம்தேதி வரை அவகாசம்- தமிழக அரசு அறிவிப்பு

09.10.2015
மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு விருதுகள்: விண்ணப்பிக்க 26ம்தேதி வரை அவகாசம்- தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 15 விருதுகள் மற்றும் சான்றிதழ்களுக்கு வரும் 26ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள், 3.12.2015, மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளது.விருதுகள் விவரம் விருதுகள்1) சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர்(கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வைதிறன் பாதிக்கப்பட்டோர், செவித் திறன்பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சிகுன்றியோர் மற்றும் தொழுநோயால்குணமடைந்தோர்)5 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்2 சிறந்த ஆசிரியர் -(பார்வைத் திறன் பாதிக்கப்பட்டோருக்குகற்பித்தல், செவித் திறன்பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், மற்றும்மன வளர்ச்சி குன்றியோருக்குகற்பித்தல்)3 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்3 சிறந்த சமூகப் பணியாளர் 1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்4 மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்தசிறந்த தொண்டு நிறுவனம்1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்5 மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில்பணியமர்த்திய சிறந்த நிறுவனம்1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்6 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில்பணியாற்றும் சிறந்த ஆசிரியர்(செவித் திறன் குறைந்தோருக்குகற்பிக்கும் சிறந்த ஆசிரியர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும்சிறந்த ஆசிரியர்)2 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்7 மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாகபணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்2 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்மொத்தம் 15 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் விருதுகள் பெற, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், ஜவஹர்லால் நேருஉள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை - 78 அல்லது www. scd.tn. gov. in என்ற இணையதளமுகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்அவர்களிடம் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களுக்கு 26.10.2015க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment