FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, October 18, 2015

மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

16.10.2015, கடலுார்: 
கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை முடிவடையும் காலாண்டிற்கான உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மனுதாரர் உடல் உறுப்பு நலம் குன்றியவராகவும், அல்லது செவிப்புலன் இழந்தவராக இருந்து கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து ஓராண்டிற்கு மேல் உயிர் பதிவேட்டில் காத்திருப்பவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பு மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருப்பவராக இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் தற்போது படிப்பவராக இருக்கக் கூடாது. அஞ்சல் வழிக்கல்வி, தொலைதுாரக் கல்வி படிப்போர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மனுதாரர் தமிழ்நாட்டில் படித்தவராக இருக்க வேண்டும்.அசல் கல்விச்சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை முதலியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment