FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, October 18, 2015

மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

16.10.2015, கடலுார்: 
கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை முடிவடையும் காலாண்டிற்கான உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மனுதாரர் உடல் உறுப்பு நலம் குன்றியவராகவும், அல்லது செவிப்புலன் இழந்தவராக இருந்து கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து ஓராண்டிற்கு மேல் உயிர் பதிவேட்டில் காத்திருப்பவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பு மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருப்பவராக இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் தற்போது படிப்பவராக இருக்கக் கூடாது. அஞ்சல் வழிக்கல்வி, தொலைதுாரக் கல்வி படிப்போர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மனுதாரர் தமிழ்நாட்டில் படித்தவராக இருக்க வேண்டும்.அசல் கல்விச்சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை முதலியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment