FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, October 18, 2015

மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

16.10.2015, கடலுார்: 
கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை முடிவடையும் காலாண்டிற்கான உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மனுதாரர் உடல் உறுப்பு நலம் குன்றியவராகவும், அல்லது செவிப்புலன் இழந்தவராக இருந்து கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து ஓராண்டிற்கு மேல் உயிர் பதிவேட்டில் காத்திருப்பவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பு மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருப்பவராக இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் தற்போது படிப்பவராக இருக்கக் கூடாது. அஞ்சல் வழிக்கல்வி, தொலைதுாரக் கல்வி படிப்போர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மனுதாரர் தமிழ்நாட்டில் படித்தவராக இருக்க வேண்டும்.அசல் கல்விச்சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை முதலியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment