FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, October 3, 2015

அரசு ஐடிஐ-களில் 350 இளநிலை பயிற்சி அதிகாரி பணியிடம்: நேரடி நியமன நெறிமுறைகள் வெளியீடு

03.10.2015
தமிழகத்தில் உள்ள ஐடிஐ-களில் இளநிலை பயிற்சி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க தகுதி மற்றும் தேர்வு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஐடிஐகளின் பயிற்சியாளர் பிரிவில் 350க்கும் மேற்பட்ட இளநிலை பயிற்சி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணியிடங்களை நிரப்புவதற் கான புதிய வழிமுறைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வகுத்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இதன்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தகுதியானவர்கள் பட்டியல் இன சுழற்சி அடிப்படையில் பெறப்பட வேண்டும்.

நேரடி நியமனம் குறித்த விளம்பரம் வெளியிட்டு அதன் மூலமும் விண்ணப்பங்கள் பெற வேண்டும். தேர்வுக்கு ரூ.100-ம், விண்ணப்பம் மற்றும் நடைமுறை கட்டணமாக ரூ.50-ம் வசூலிக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, எஸ்சி அருந்ததியர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கல்வி கட்டணம் இல்லை.

விண்ணப்பங்களை பரிசீலித்து மாநில அளவில் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

அதன்பின் செயல்திறன் மற்றும் கற்பித்தல் திறன் குறித்த தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் இளநிலை பயிற்சி அதிகாரியை தேர்வு செய்யலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேர்வுக்கான மதிப் பெண்கள், அனுபவம் மற்றும் தகுதிக்கான மதிப்பெண்களும் அரசாணையில் வெளியிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment