FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, October 3, 2015

அரசு ஐடிஐ-களில் 350 இளநிலை பயிற்சி அதிகாரி பணியிடம்: நேரடி நியமன நெறிமுறைகள் வெளியீடு

03.10.2015
தமிழகத்தில் உள்ள ஐடிஐ-களில் இளநிலை பயிற்சி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க தகுதி மற்றும் தேர்வு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஐடிஐகளின் பயிற்சியாளர் பிரிவில் 350க்கும் மேற்பட்ட இளநிலை பயிற்சி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணியிடங்களை நிரப்புவதற் கான புதிய வழிமுறைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வகுத்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இதன்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தகுதியானவர்கள் பட்டியல் இன சுழற்சி அடிப்படையில் பெறப்பட வேண்டும்.

நேரடி நியமனம் குறித்த விளம்பரம் வெளியிட்டு அதன் மூலமும் விண்ணப்பங்கள் பெற வேண்டும். தேர்வுக்கு ரூ.100-ம், விண்ணப்பம் மற்றும் நடைமுறை கட்டணமாக ரூ.50-ம் வசூலிக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, எஸ்சி அருந்ததியர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கல்வி கட்டணம் இல்லை.

விண்ணப்பங்களை பரிசீலித்து மாநில அளவில் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

அதன்பின் செயல்திறன் மற்றும் கற்பித்தல் திறன் குறித்த தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் இளநிலை பயிற்சி அதிகாரியை தேர்வு செய்யலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேர்வுக்கான மதிப் பெண்கள், அனுபவம் மற்றும் தகுதிக்கான மதிப்பெண்களும் அரசாணையில் வெளியிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment