FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, October 1, 2015

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு

01.10.2015,
சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கு தமிழக அரசு, வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக உதவித்தொகை வழங்கி வருகிறது. எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2, பட்டப் படிப்பு உள்ளிட்ட கல்வித் தகுதி களை வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவுசெய்து 5 ஆண்டு களுக்கு மேல் வேலைவாய்ப்பு இல்லாமல் காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தை அணுக வேண்டும்.

எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்கள் நந்தனத்தில் உள்ள தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தை தொடர்புகொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் (எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 45 வயது), தனியார் அல்லது சுயவேலை வாய்ப்பில் ஈடுபடாமல் இருப்ப வராகவும், குடும்ப ஆண்டு வரு மானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரையில், பதிவுசெய்து ஓராண்டு ஆகியிருந்தால் போது மானது. அவர்கள் கிண்டி மகளிர் ஐடிஐ வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளி களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு கல்வித்தகுதி மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு ஏதுமில்லை.

ஏற்கெனவே உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகளில் விண்ணப்பித்து ஓராண்டு முடிவுபெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் (எம்ஆர் நம்பர்) ஆகிய விவரங்களுடன் நவம்பர் 30-ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment