FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, October 1, 2015

4 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் இந்தியா

01.10.2015
சிங்கப்பூர்,
அடுத்த 7 ஆண்டுகளில் சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், அழகுக்கலை உள்ளிட்ட துறைகளில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 4 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் குடிசை வாழ் பகுதியில் உள்ள ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு 12 துறைகளில் இந்த வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்கில் கவுன்சில் தலைவராக கடந்த 2 மாதங்களுக்கு முன் பது கேஸ்வானி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, 19 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் 12 துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், பயிற்சிகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. இந்த தகவலை பது கேஸ்வானி சிங்கப்பூரில் இன்று நடந்த ஹியூமன் கேப்பிடல் மாநாட்டுக்கு பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment