FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, October 1, 2015

4 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் இந்தியா

01.10.2015
சிங்கப்பூர்,
அடுத்த 7 ஆண்டுகளில் சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், அழகுக்கலை உள்ளிட்ட துறைகளில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 4 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் குடிசை வாழ் பகுதியில் உள்ள ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு 12 துறைகளில் இந்த வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்கில் கவுன்சில் தலைவராக கடந்த 2 மாதங்களுக்கு முன் பது கேஸ்வானி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, 19 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் 12 துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், பயிற்சிகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. இந்த தகவலை பது கேஸ்வானி சிங்கப்பூரில் இன்று நடந்த ஹியூமன் கேப்பிடல் மாநாட்டுக்கு பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment