FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, October 1, 2015

4 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் இந்தியா

01.10.2015
சிங்கப்பூர்,
அடுத்த 7 ஆண்டுகளில் சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், அழகுக்கலை உள்ளிட்ட துறைகளில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 4 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் குடிசை வாழ் பகுதியில் உள்ள ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு 12 துறைகளில் இந்த வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்கில் கவுன்சில் தலைவராக கடந்த 2 மாதங்களுக்கு முன் பது கேஸ்வானி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, 19 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் 12 துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், பயிற்சிகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. இந்த தகவலை பது கேஸ்வானி சிங்கப்பூரில் இன்று நடந்த ஹியூமன் கேப்பிடல் மாநாட்டுக்கு பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment