FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, October 1, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

01.10.2015, ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கொடகரை அருகே உள்ள, கீழ்கொச்சாவூரை சேர்ந்தவர் விவசாயி வீரபத்திரப்பா. இவருக்கு காது கேட்காத, வாய் பேச முடியாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். கடந்த டிசம்பர், 25ம் தேதி மாலை, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள விவசாய நிலத்தில், அறுவடை செய்த ராகி பயிறுக்கு காவல் இருந்த, வீரபத்திரப்பாவிற்கு உணவு வழங்கி விட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த மாற்றுத்திறனாளி சிறுமியை, கீழ்கொச்சாவூரை சேர்ந்த முத்தப்பா, 26, மேல்கொச்சாவூரை சேர்ந்த மாதப்பா, 22, அதே பகுதியை சேர்ந்த ருத்ரப்பா, 22, சித்தலிங்கா, 23, ஆகிய நான்கு பேர், கட்டையால் தாக்கி, புதர்மறைவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தந்தை வீரபத்திரப்பா, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். நான்கு பேர் மீது, மூன்று பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்த போலீசார்ல, அவர்களை கைது செய்தனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த சிறுமியின் தந்தை வீரபத்திரப்பா, தன் மகள் பாலியல் பலாத்கார வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி., போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

No comments:

Post a Comment