FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, October 1, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

01.10.2015, ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கொடகரை அருகே உள்ள, கீழ்கொச்சாவூரை சேர்ந்தவர் விவசாயி வீரபத்திரப்பா. இவருக்கு காது கேட்காத, வாய் பேச முடியாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். கடந்த டிசம்பர், 25ம் தேதி மாலை, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள விவசாய நிலத்தில், அறுவடை செய்த ராகி பயிறுக்கு காவல் இருந்த, வீரபத்திரப்பாவிற்கு உணவு வழங்கி விட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த மாற்றுத்திறனாளி சிறுமியை, கீழ்கொச்சாவூரை சேர்ந்த முத்தப்பா, 26, மேல்கொச்சாவூரை சேர்ந்த மாதப்பா, 22, அதே பகுதியை சேர்ந்த ருத்ரப்பா, 22, சித்தலிங்கா, 23, ஆகிய நான்கு பேர், கட்டையால் தாக்கி, புதர்மறைவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தந்தை வீரபத்திரப்பா, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். நான்கு பேர் மீது, மூன்று பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்த போலீசார்ல, அவர்களை கைது செய்தனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த சிறுமியின் தந்தை வீரபத்திரப்பா, தன் மகள் பாலியல் பலாத்கார வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி., போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

No comments:

Post a Comment