FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, October 1, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

01.10.2015, ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கொடகரை அருகே உள்ள, கீழ்கொச்சாவூரை சேர்ந்தவர் விவசாயி வீரபத்திரப்பா. இவருக்கு காது கேட்காத, வாய் பேச முடியாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். கடந்த டிசம்பர், 25ம் தேதி மாலை, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள விவசாய நிலத்தில், அறுவடை செய்த ராகி பயிறுக்கு காவல் இருந்த, வீரபத்திரப்பாவிற்கு உணவு வழங்கி விட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த மாற்றுத்திறனாளி சிறுமியை, கீழ்கொச்சாவூரை சேர்ந்த முத்தப்பா, 26, மேல்கொச்சாவூரை சேர்ந்த மாதப்பா, 22, அதே பகுதியை சேர்ந்த ருத்ரப்பா, 22, சித்தலிங்கா, 23, ஆகிய நான்கு பேர், கட்டையால் தாக்கி, புதர்மறைவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தந்தை வீரபத்திரப்பா, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். நான்கு பேர் மீது, மூன்று பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்த போலீசார்ல, அவர்களை கைது செய்தனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த சிறுமியின் தந்தை வீரபத்திரப்பா, தன் மகள் பாலியல் பலாத்கார வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி., போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

No comments:

Post a Comment