FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, October 1, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

01.10.2015, ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கொடகரை அருகே உள்ள, கீழ்கொச்சாவூரை சேர்ந்தவர் விவசாயி வீரபத்திரப்பா. இவருக்கு காது கேட்காத, வாய் பேச முடியாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். கடந்த டிசம்பர், 25ம் தேதி மாலை, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள விவசாய நிலத்தில், அறுவடை செய்த ராகி பயிறுக்கு காவல் இருந்த, வீரபத்திரப்பாவிற்கு உணவு வழங்கி விட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த மாற்றுத்திறனாளி சிறுமியை, கீழ்கொச்சாவூரை சேர்ந்த முத்தப்பா, 26, மேல்கொச்சாவூரை சேர்ந்த மாதப்பா, 22, அதே பகுதியை சேர்ந்த ருத்ரப்பா, 22, சித்தலிங்கா, 23, ஆகிய நான்கு பேர், கட்டையால் தாக்கி, புதர்மறைவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தந்தை வீரபத்திரப்பா, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். நான்கு பேர் மீது, மூன்று பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்த போலீசார்ல, அவர்களை கைது செய்தனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த சிறுமியின் தந்தை வீரபத்திரப்பா, தன் மகள் பாலியல் பலாத்கார வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி., போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

No comments:

Post a Comment